search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் டபுள் AI தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் - பிரதமர் மோடி
    X

    இந்தியாவில் 'டபுள் AI' தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் - பிரதமர் மோடி

    • ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம்.
    • நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.

    அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள்

    * ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டுமே மத்திய பாஜக அரசின் நோக்கம்

    * முன்பு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஒரே ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமே இருந்தது

    * ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் பட் வழங்குவதை தொடங்கினோம்.

    * நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.

    * AI என்ற வார்த்தை மிகவும் நாகரீகமாக மாறிவிட்ட இந்த நேரத்தில், இந்தியா இரட்டை AI இன் சக்தியை கொண்டுள்ளது.

    * முதல் AI என்பது செயற்கை நுண்ணறிவையும் இன்னொரு AI ஆஸ்பிரேஷனல் இந்தியாவை குறிக்கிறது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×