search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் எங்கும் ஓடிப்போக மாட்டேன்: பட்னாவிஸ் உறுதி
    X

    நான் எங்கும் ஓடிப்போக மாட்டேன்: பட்னாவிஸ் உறுதி

    • பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
    • இதற்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மாநில பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து கட்சித் தலைவராகத் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். உணர்ச்சிகள் அல்லது தேர்தல் பின்னடைவுக்கான சோகத்தால் நான் தூண்டப்படவில்லை.

    ஆளும் மகாயுதி கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியாக போராடுவேன் என வெளியான தகவல் வெறும் புரளி.

    நான் எங்கும் ஓடிப்போக மாட்டேன். நான் மீண்டும் பலத்துடன் போராடுவேன். சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான் என தெரிவித்தார்.

    Next Story
    ×