என் மலர்
இந்தியா

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி தர இயலாது: மத்திய அமைச்சர்

- அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?
- தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு தரக்கூடிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது ஏன்?. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் விதிகளின்படி நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் நிதி ஒதுக்க இயலாது.
தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அவர்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் 3-வது மொழியை கற்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மற்றும் 3-வது மொழியை ஏற்கமாட்டோம் என்றால் அது விதிகளின்படி தவறு. நிதி ஒதுக்க முடியாது.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.