search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் 86 வயதில் காலமானார்
    X

    கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் 86 வயதில் காலமானார்

    • அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.
    • சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

    கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார்.

    சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

    இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.

    ஸ்டேஷனரி தயாரிப்பில் கேம்லின் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.

    Next Story
    ×