search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்ணை கட்டையால் தாக்கிய கும்பல் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்
    X

    பெண்ணை கட்டையால் தாக்கிய கும்பல் - காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்

    • முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தொகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் தாக்கப்படும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுப்பது பதிவாகியுள்ளது.

    வீடியோ வைரலானத்தை அடுத்து, முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.

    Next Story
    ×