search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    18-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் ஜூன் 15-ந்தேதி தொடங்க வாய்ப்பு
    X

    18-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் ஜூன் 15-ந்தேதி தொடங்க வாய்ப்பு

    • மோடி நாளை பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
    • எம்.பி.க்கள் பதவி ஏற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு செய்ய மக்களவை கூட இருக்கிறது.

    இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ந்தேதி நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    அதன்பின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் எம்.பி. சபாநாயகராக தேர்வாக வாய்ப்புள்ளது. அதன்பின் ஜனாதிபதி இரண்டு அவைகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைப்பார்.

    இந்த நிலையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.க்கள் பதவி, சபாநாயகர் தேர்வு முடிவடைந்த உடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டும். பின்னர் பட்ஜெட்டுக்கான கூட்டத் தொடர் நடைபெறும்.

    தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகுியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×