search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானா சட்டசபை தேர்தல்: ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க ராகுல்காந்தி தீவிரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரியானா சட்டசபை தேர்தல்: ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க ராகுல்காந்தி தீவிரம்

    • பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது.
    • பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன.

    புதுடெல்லி:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

    ஆளும் பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். பா.ஜனதா வெற்றிக்கு சிறிய வாய்ப்பும் தரக்கூடாது என கருதி அவர் ஆம்ஆத்மியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

    பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒன்றிணைக்க ஆம்ஆத்மி கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மிடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன. கெஜ்ரிவாலும், குமாரி செல்ஜாவும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் ராகுல்காந்தி கூட்டணிக்கான ஆர்வத்தில் உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரிலும் இதே போல தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டி என்று அறிவித்து வந்தது. ஆனால் ஸ்ரீநகருக்கு சென்ற ராகுல்காந்தி நேரடியாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தார். இதே வியூகத்தைத்தான் அரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார்.

    Next Story
    ×