search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மாட்டு வண்டியில் பயணம் செய்த அரியானா முதல் மந்திரி
    X

    மாட்டு வண்டியில் பயணம் செய்த அரியானா முதல் மந்திரி

    • அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
    • இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மாநில பா.ஜ.க. தலைவரான மோகன் லால் பதோலி ஆகியோர் ஜிந்த் கிராமத்தில் இன்று மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

    அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்மணியிடம் முதல் மந்திரி நயாப் சிங் சைனி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    முதல் மந்திரியின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டு வண்டியுடன் நடந்து சென்றனர்.

    Next Story
    ×