search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களின் குறியீடு இது.. கையில் கைதி முத்திரையுடன் ஹேமந்த் சோரன் விளாசல்
    X

    'ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களின் குறியீடு இது'.. கையில் கைதி முத்திரையுடன் ஹேமந்த் சோரன் விளாசல்

    • மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வராக இருந்த , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கடத்த ஜனவரி 31-ந்தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    இருப்பினும் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை 3 அன்று வெளியில் வந்தார். அதனைதொடர்ந்து மீண்டும் அவர் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இன்று [ஆகஸ்ட் 10] ஹேமந்த் சோரன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.

    அதாவது, சிறையில் இருந்து வெளிவரும்போது, அதிகாரிகள் தனது கையில் குத்திய கைதி முத்திரையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹேமந்த் சோரன், இது எனக்கு இடப்பட்ட முத்திரை மட்டுமல்ல, இது தற்போது நமது ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களைக் குறிக்கும் முத்திரை என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரை அரசியல் ஆதாயங்களுக்காக பலரை தேர்தலின்போது திட்டமிட்டு சிறையில் அடைந்ததாகவும் இதற்கு ஜனநாயக அமைப்பின் அங்கங்களுக்கான அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றைத் தவறாக பயன்படுத்தியாகவும் ஆளும் மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×