search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தேன்- நிதின் கட்காரி
    X

    பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தேன்- நிதின் கட்காரி

    • பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை.
    • நான் சமரசம் செய்ய மாட்டேன்.

    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை. ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது எனக்கு நினைவிக்கிறது.

    எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். அந்த அரசியல் தலைவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல.

    நான் ஒரு சித்தாந்தத் தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறி னேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன்.

    நான் கனவில் கூட நினைக்காத அனைத்தையும் கொடுத்த கட்சியில் இருக்கிறேன். எந்த சலுகையும் என்னை கவர்ந்து இழுக்க முடியாது. நான் சார்ந்துள்ள அமைப்புக்கு என்றும் நம்பிக்கையாக இருப்பேன்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவுக்கு பெரும் பான்மை கிடைக்காது, மேலும் சில எதிர்கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்று கருதப்படும்போது, ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் தலைவர் தன்னை அணுகியதாக நிதின் கட்காரி சுட்டிக்காட்டி உள்ளார்.

    Next Story
    ×