search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மம்தா புறக்கணிப்பு
    X

    டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

    • ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
    • பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×