search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதி கோவிலில் சந்திரயான்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
    X

    திருப்பதி கோவிலில் சந்திரயான்-3 மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

    • சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருமலை:

    சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி சந்திரயான்-3 ரோவர் நிலவில் தரையிறங்கும் என்றனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார்பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம் பெற்றனர்.

    Next Story
    ×