search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மூன்றில் ஒன்று அரசாங்கம் அல்ல, பிரதமர்தான்: மோடி திரித்துக் கூறுவதாக ஜெய்ராம் ரமேஷ் பதில்
    X

    மூன்றில் ஒன்று அரசாங்கம் அல்ல, பிரதமர்தான்: மோடி திரித்துக் கூறுவதாக ஜெய்ராம் ரமேஷ் பதில்

    • மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
    • பிரதமர் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:

    ராகுல் காந்தியின் பேச்சை பிரதமர் திரித்து தவறாகப் புரிந்துகொண்ட விதம், அவர் பாராளுமன்றத்தில் பேசாமல் தேர்தல் உரையை நிகழ்த்துவது போல் இருந்தது.

    பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்தபோது காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்றபோது அவருக்கு மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    பிரதமர் பொய் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரதமர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2024 தேர்தல் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக இழப்பாகும். அவருக்கு ஆணை கிடைக்கவில்லை.

    எனவே நான் 1/3வது பிரதமர் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த அறிக்கையையும் திரித்து 1/3-வது அரசாங்கத்தை நான் குறிப்பிடுகிறேன் என்று கூறினார். நாயுடு மற்றும் நிதிஷ் இல்லாமல் அவர் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.

    அவர் மூன்றாவது முறையாக பிரதமரானாலும் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது உண்மைதான் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×