search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குவைத் தீ விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
    X

    குவைத் தீ விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    • இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது. தமிழகர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக உதவிகளைப் பெற இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    குவைத் தீ விபத்து தொடர்பாக +965 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    மேலும், தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

    குவைத் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம்.

    உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×