search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்
    X

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    • பின்னர் 2-ந்தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட அவரை சில நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    பின்னர் 2-ந்தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை ஜூலை 3-ந்தேதி வரை நீடித்துள்ளது.

    இதனையயடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசரணை இன்று நடைபெற்றது.

    அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    Next Story
    ×