search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்தில் மாநில கட்சிகளுக்கு  பா.ஜனதா ஆதரவு
    X

    மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்தில் மாநில கட்சிகளுக்கு பா.ஜனதா ஆதரவு

    • கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதாவில் வெற்றி பெற முடியவில்லை.
    • நாகாலாந்தில் இரண்டு தொகுதிகளிலும் என்பிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேகாலயாவில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சம்பித் பத்ரா எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மேகாலயாவில் உள்ள இரண்டு இடங்களிலும், மணிப்பூரில் ஒரு இடத்திலும் பா.ஜனதா போட்டியிட்டது. ஆனால் மூன்று இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட அரசியல் விளைவு, பா.ஜனதாவை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் மூன்று மாநிலங்களிலும் ஆதரவு அளிக்கும் இடங்களில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்த கட்சிகள் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு அடிக்கடி ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×