search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விஷ்வ இந்து பரிசத் நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதிகள்: மஹுவா மொய்த்ரா சொல்வது என்ன?
    X

    விஷ்வ இந்து பரிசத் நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதிகள்: மஹுவா மொய்த்ரா சொல்வது என்ன?

    • நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு சுதந்திரம் உள்ளது- நீதிபதி குப்தா
    • உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக முடியும்- மொய்த்ரா

    விஷ்வ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குப்தாவும் இதில் கலந்து கொண்டார். இவர் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார்.

    நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சனம் செய்துள்ளார். இது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அரசியல் மற்றும் சித்தாந்த பார்வை தொடர்பான புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

    இந்த நிழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி "இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொள்வது தொடர்பாக கவலை தெரிவிக்கப்படுகிறது. மற்ற நீதிபதிகள் பற்றி என்றால் கருத்து கூற இயலாது. நாட்டின் மற்ற குடிமகன் போன்று நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு சுதந்திரம் உள்ளது" எனக் கூறியிருந்தார்.

    மஹுமா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் "உண்மையிலேயே மைலார்ட்ஸ், நீங்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள சுதந்திரம் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக முடியும். எதையும் செய்வதில் இருந்து கடவுளை யாரால் தடுத்து நிறுத்த முடியும். உங்களைக் கேள்வி கேட்க நாங்கள் யார் - வெறும் மனிதர்கள்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல தடைவிதித்த அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை, ஹேமந்த் குப்தா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது உறுதி செய்தார். அதேவேளையில் மற்றொரு நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப் அணிய தடை இல்லை என மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

    Next Story
    ×