search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி சீரழித்துவிட்டார்.. வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வைத்து கார்கே தாக்கு
    X

    'இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி சீரழித்துவிட்டார்'.. வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வைத்து கார்கே தாக்கு

    • கடந்த 2022 -23 காலகட்டத்தில் இருந்த வேலைவாய்ப்பினை விகிதம் சற்றும் குறையாமல் 3.2 சதவீதமாகவே நீடித்து வருகிறது
    • போட்டோ சூட் நடத்துவதை தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த மோடி யோசித்ததுண்டா?

    பிரதமர் மோடி இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள கார்கே, ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு இளைஞரிடமும் இருந்து அவரது வேலைவாய்ப்பு பாஜக அரசால் பறிக்கப்படுவதை மோடி நினைவுகூர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கார்கேவின் இந்த விமர்சனம் சமீபத்தில் வெளியான பிரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே (PLFS) எனப்படும் காலநிலை தொழிலாளர் கணக்கெடுப்பு வெளியானதை ஒட்டி அமைந்துள்ளது. PLFS கணக்கெடுப்புப்படி 2023 - 24 ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது.

    கடந்த 2022 -23 காலகட்டத்திலும் வேலைவாய்ப்பினை விகிதம் 3.2 சதவீதமாகவே இருந்தது. இதன் பொருள் புதிதாக நிலையான எந்த வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படாமல் இருப்பதால் போதுமான வேலை இல்லாமல் வேலைவாய்ப்பின்மை சிறிதளவும் குறையாமல் அப்படியே இருப்பதே ஆகும் என்பதை முன்வைத்து கார்கே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் பதிவிட்டுள்ள அவர், பாஜக அரசின் எவ்வளவு முயற்சித்தும் இளைஞர்கள் முற்றிலும் கைவிடப்பட்ட இந்த உண்மையை பாஜக அரசால் மறைக்க முடியவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதில் மோடிஜி முக்கிய பங்கு வகிக்கிறார்.

    இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு 10.2 இருப்பதை மோடி அறியமாட்டாரா?, வண்ணமயமான வாசகங்களை மேடை தோறும் பேசுவதையும் , போட்டோ சூட்களையும் நடத்துவதையும் தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த மோடி யோசித்ததுண்டா? நிலையான சம்பளம் கொண்ட வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த 7 ஆண்டுகளில் முற்றிலுமாக கீழிறங்கியுள்ளது என்று கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×