search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தோல்விக்கான பொறுப்பை ஏற்காமல் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் மோடி- சோனியா காந்தி
    X

    தோல்விக்கான பொறுப்பை ஏற்காமல் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் மோடி- சோனியா காந்தி

    • அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளார்.
    • உண்மையில், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மோடி இழந்துவிட்டார்.

    பழைய பாராளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.

    இந்நிலையில், கூட்டத்தில் தோல்விக்கான பொறுப்பை சற்றும் ஏற்காமல் நாளை பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் மோடி என காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " தன்னுடைய பெயரை மட்டுமே முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட மோடி, அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளார்.

    உண்மையில், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மோடி இழந்துவிட்டார். ஆனால், தோல்விக்கான பொறுப்பை சற்றும் ஏற்காமல் பிரதமராக நாளை பதவி ஏற்கவுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×