என் மலர்tooltip icon

    இந்தியா

    விலை வீழ்ச்சியால் பச்சை மிளகாயை மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டிய விவசாயிகள்
    X

    விலை வீழ்ச்சியால் பச்சை மிளகாயை மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டிய விவசாயிகள்

    • விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக வேதனை.
    • வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    வெங்காயம் மற்றும் பூண்டு விலையில் கடும் பின்னடைவைச் சந்தித்த பிறகு, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ மிளகாய், 6 முதல் 7 ரூபாய் வரையிலும், சந்தை விலை கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

    விவசாயிகள் பச்சை மிளகாய் நிரப்பப்பட்ட மூட்டைகளை சாலைகளில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையிலான இந்த பரந்த வேறுபாடு காரணமாக விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×