search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: வீடியோ வைரலானதால் போலீஸ் வழக்குப்பதிவு
    X

    நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: வீடியோ வைரலானதால் போலீஸ் வழக்குப்பதிவு

    • அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் குற்றாவாளியை தேடி வருகிறது.

    Next Story
    ×