என் மலர்tooltip icon

    இந்தியா

    இனிமேல் NTA உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வில் மட்டும்தான் கவனம் செலுத்தும்: மத்திய மந்திரி
    X

    இனிமேல் NTA உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வில் மட்டும்தான் கவனம் செலுத்தும்: மத்திய மந்திரி

    • தேசிய தேர்வு முகமையில் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்பட இருக்கிறது.
    • நுழைவுத் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.

    மறுசீரமைப்புக்கான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதியாக அடுத்த வருடத்தில் இருந்து NTA (தேசிய தேர்வு முகமை) ஆள்சேர்ப்பு தேர்வு போன்றவற்றை நடத்தாது. உயர் கல்வி நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்தும் என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்.டி.ஏ.-வில் புதிதாக 10 பதவிகள் சேர்க்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கிறது. நுழைவுத் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் செயல்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது.

    பொதுவான பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (Common University Entrance Test: CUET- UG) வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். பாரம்பரிய பென்-பேப்பர் அடிப்படையிலான நீட் நுழைவுத் தேர்வை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக மாற்றலாமா? என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் விவாதிப்போம். அரசாங்கம் விரைவில் கணினி தகவமைப்புத் தேர்வு (computer adaptive test) மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு (technology-driven entrance exams) மாறுவதைப் பரிசீலித்து வருகிறது" என்றார்.

    கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டபோதிலும், குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் என உத்தரவிட்டது.

    Next Story
    ×