search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள முகமது யூனுஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள முகமது யூனுஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
    • வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள முகமது யூனுஸ்க்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பேராசிரியர் முகமது யூனுஸ் அவர்களின் புதிய பொறுப்புகளை ஏற்ற அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, இயல்புநிலைக்கு விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நமது இரு நாட்டு மக்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×