search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    என் அரசியல் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் - பிரதமர் மோடி
    X

    என் அரசியல் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் - பிரதமர் மோடி

    • மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
    • உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    * பாராளுமன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    * பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    * மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.

    * எனது அரசியல் பயணத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

    * 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    * நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான வழிகாட்டி.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான எங்களது உழைப்பு தொடரும்.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு.

    * உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    * நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் "அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் உன்னத பட்ஜெட்".

    * 3-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    * பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது.

    * கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    Next Story
    ×