search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு
    X

    பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு

    • ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.
    • பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ம் தேதி தமிழகம் வருகை தர இருந்தார்.

    சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைப்பதற்காக ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×