search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் மெஷின் பரிசளித்த ராகுல் காந்தி
    X

    செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் மெஷின் பரிசளித்த ராகுல் காந்தி

    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை ராம்சேட் பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

    இதனால், இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    Next Story
    ×