search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செல்லப்பிராணிக்காக உதவிகேட்ட ரத்தன் டாடா
    X

    செல்லப்பிராணிக்காக உதவிகேட்ட ரத்தன் டாடா

    • நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
    • பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்திய தொழிலதிபரும், டாட்டா சன்ஸ்ஸின் முன்னாள் தலைவருமானவர் ரத்தன் நவால் டாட்டா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மக்களிடம் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.

    'நீங்கள் உதவினால் நான் மனதார பாராட்டுவேன்' என்னும் தலைப்பில் நாயின் புகைப்படத்துடன் பதிவை தொடங்கும் ரத்தன் டாட்டா, எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள 7 மாத நாய்க்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அந்த நாய் சந்தேகப்படும்படியான டிக் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உடனடியாக மும்பையில் இருந்து நாய் ரத்த தானம் செய்பவர் அவசரமாக தேவை...

    ரத்தம் வழங்கும் நாயானது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானதாகவும், 1 முதல் 8 வயது உடையதாகவும், எடை சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அந்த நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அந்த நாய் எந்த நோய்க்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த பதிவு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×