search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.100 கோடி ஊழல் செய்ததாக ரோஜா மீது புகார்
    X

    ரூ.100 கோடி ஊழல் செய்ததாக ரோஜா மீது புகார்

    • ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார்.
    • மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபுநாயுடு முதல்-மந்திரி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே இந்த போட்டி நடத்தியதில் நடிகை ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11-ந்தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு இருப்பதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரோஜா அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    Next Story
    ×