search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் தமிழ்க்கல்லூரி அமைக்க ரூ.25 லட்சம் நிதி உதவி- சரத்குமார் அறிவிப்பு
    X

    டெல்லியில் தமிழ்க்கல்லூரி அமைக்க ரூ.25 லட்சம் நிதி உதவி- சரத்குமார் அறிவிப்பு

    • டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன
    • சரத்குமார் தனது வாழ்க்கைப்பயணத்தின் முழு விவரத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இதில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இதனைத்தொடர்ந்து நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளி நிர்வாகமும், முன்னாள் மாணவர்களும் இணைந்து டெல்லி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்திய இவ்விழாவில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும், பிற விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    அப்போது, தானும் டெல்லி தமிழ் பள்ளியில் படித்ததாக தெரிவித்தார். அதற்கு சான்றாக தனது மாணவர் முன்னேற்ற அறிக்கையை காண்பித்தார். டெல்லி தமிழ்க்கழகம் சார்பில் கல்லூரி தொடங்கவேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், அதற்கு முதல் பங்களிப்பாக ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் கூறினார். தனது வாழ்க்கைப்பயணத்தின் முழு விவரத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×