search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் பலி  - 8 பேர்  படுகாயம்
    X

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் பலி - 8 பேர் படுகாயம்

    • பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிர்பலி அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி வெற்றி விழாவில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கிசூட்டில் முடிந்துள்ளது.

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×