என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
எமர்ஜென்சி மீதான தீர்மானம்... அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்- முதல்நாளிலேயே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
- இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
- எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுடெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
* இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
* எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.
* எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.
இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்