search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு சுஹேல் சேத் கோரிக்கை
    X

    ரத்தன் டாடாவுக்கு "பாரத ரத்னா" விருது: பிரதமருக்கு சுஹேல் சேத் கோரிக்கை

    • ரத்தன் டாடாவிற்கு எற்கனவே பத்ம விபூஷன், பாரத பூஷன் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது.- சுஹேல் சேத்

    டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    "இதை நான் சொல்லக்கூடாது, இருந்தாலும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது. தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, அவர் தனது பொதுசேவை மூலம் மில்லியன் கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் ஒரு உண்மையான இந்தியன்... அது விருதை அழகாக்க மட்டுமே செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை. இன்னும் ஒவ்வொரு இந்தியனும் அவனது குடும்ப உறுப்பினராக இருந்தான். ஒரு மனிதனுக்காக 1.4 பில்லியன் மக்கள் துக்கம் அனுசரிப்பது அரிது.

    அதுதான் ரத்தன் டாடா. தொடர்ந்து இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும். ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

    Next Story
    ×