search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதி லட்டு விவகாரம்: காங்கிரஸ் சொல்வது என்ன?
    X

    திருப்பதி லட்டு விவகாரம்: காங்கிரஸ் சொல்வது என்ன?

    • உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும்.
    • உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான அவதூறுக்காக மன்னிக்கமாட்டார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என பதிலடி கொடுத்திருந்தது.

    அதேவேளையில் ஆய்வு முடிவில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஏழுமலையான் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படவில்லை என்றால், பாஜக-வின் பிரித்தாளும் சதி கொள்கைக்கு அனுமதிப்பது போன்றதாகிவிடும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி லட்டை அவமதிக்கும் வகையிலான இந்த குற்றச்சாட்டு உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளையில் தவறாக அல்லது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான புனிதத்தன்மையை களங்கப்படுத்தியதற்காக மன்னிக்கமாட்டார்கள்.

    அதுவரை தேர்தல் சீசனில் பிரித்தாளும் சதி கொள்கை அனுமதிக்கும் வகையில் பாஜக-விற்கு வசதியாக அமைந்திவிடும்.

    இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×