என் மலர்
இந்தியா

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 3 பேர் பலி- இருவர் கவலைக்கிடம்
- விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






