search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்திற்கு டெலிபோன், இன்டெர்நெட் இணைப்புகள் ரத்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்திற்கு டெலிபோன், இன்டெர்நெட் இணைப்புகள் ரத்து

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.
    • ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது. எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இன்டெர் நெட் வசதிகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று வயநாடு தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×