search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Wife killed in dowry case UP
    X

    வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

    • சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வரதட்சணை தராததால் மீனா என்ற இப்பெண்ணை, அவரது கணவர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.

    வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார்.

    இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×