search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்திற்கு பாஜக கொடுக்கப்போகும் விலை என்ன?

    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கிங் மேக்கராக உள்ளனர்.
    • இருவரும் அவரவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பார்கள்.

    மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதா தனித்து பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 296 இடங்களைத்தான் பிடித்துள்ளார்.

    பாஜக-வுக்கு 240 இடங்கள்தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (12) ஆகியோரின் உதவி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது.

    இதனால் இருவரும் கிங் மேக்கர்களாக திகழ்கிறார்கள். இருவரும் பிரதமர் மோடி வீட்டில் இன்று நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டணியில் கலந்து கொண்டார்கள்.

    மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்க இருவரும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

    நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு

    நிதிஷ் குமார் கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி, மந்திரி சபையை நீட்டிக்க விரும்பி அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம். புதிதாக அமையும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைதான். இருந்தபோதிலும் எந்த கண்டிசனும் போடமாட்டோம். நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முயற்சி இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக நாடு தழுவிய சாதி வாரிய கணக்கெடுப்பை விரும்பவில்லை. இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதியில் இது ஒன்று.

    பீகாரில் வேலையாப்பின்மை மிகப்பெரியதாக உள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்துதான் ஒரு வழி என நிதிஷ் குமார் நினைக்கிறார். இதனால் இந்த இரண்டையும் பா.ஜனதாவுடன் வலியுறுத்தும்.

    சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு

    சந்திர பாபு நாயுடு கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அதிகமான இடங்களை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது பிரதான கோரிக்கையாக இருக்கும். இந்த விவகாரத்தில்தான் கடந்த 2016-ல் சந்திரபாபு நாயுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலத்தை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டு வருவேன். மாநிலத்தின் தலைநகரை சிறந்த நகராக உருவாக்குவேன் என்பதை வாக்குறுதியாக அளித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். தற்போது ஐதராபாத் ஆந்திராவின் மாநிலம் அல்ல. தெலுங்கானா மாநிலமாகிவிட்டது. இதனால் புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். இதனால் சிறப்பு அந்தஸ்து முக்கியமானதாக தெலுங்குதேசம் கருதும்.

    இதனால் நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் வளர்ச்சியல் அரசியல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது இருவரின் உதவி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் என்ன விலை கொடுக்கப் போகிறதோ? தெரியவில்லை.

    தற்போது என்டிஏ-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கிங் மேங்கராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×