என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாடல் சத்தத்தை குறைக்கும்படி கூறிய பெண் மீது துப்பாக்கிச்சூடு
- இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
- இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படி கூறினார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டைச் சேர்ந்த ரஞ்ஜு என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்தார். தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தைக் குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படியும் ரஞ்ஜூ கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்