search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நீங்களே எனது குடும்பம்.. எல்லையற்ற அன்புக்கு நன்றி - ராகுல் காந்தி நெகிழ்ச்சி கடிதம்
    X

    நீங்களே எனது குடும்பம்.. எல்லையற்ற அன்புக்கு நன்றி - ராகுல் காந்தி நெகிழ்ச்சி கடிதம்

    • வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
    • நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வடக்கில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

    இதைத்தொடர்ந்து நடக்க உள்ள மறு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி நம்பி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்ட்டை பாஜக தொடர்ந்து முனைவைத்து வருகிறது.

    இந்நிலையில் தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் எல்லையற்ற அன்பையும் நிபந்தனைகளற்ற பாசத்தையும் நீங்கள் என்னிடத்தில் காட்டினீர்கள். அரசியல் கட்சி சார்பு, சமுதாயம், மதம், மொழி ஆகிய்வற்றைத் தாண்டி எனக்கு நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

    நீங்களே எனக்கான அடைக்கலம், எனது வீடு மற்றும் எனது குடும்பமும் நீங்கள் தான். என்னை ஒரு நொடி கூட நீங்கள் சந்தேகித்தாக நான் கருதவில்லை. இதுபோலவே மறு தேர்தலில் நிற்க உள்ள பிரியங்கா காந்திக்கு நீங்கள் எம்.பி வாய்ப்பு வழங்கினால் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




    Next Story
    ×