search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருங்காலியின் பயன்கள்
    X

    கருங்காலியின் பயன்கள்

    • இயல்பிலேயே இறைத்தன்மை நிறைந்த இறைவனுக்கு மிக நெருக்கமான விருட்சம்.
    • பல சிறப்பு பெற்ற தலங்களில் கருங்காலி தல விருட்சமாக இருப்பதை காண முடிகிறது.

    இன்று உலகத்தை இயக்கிவரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரமாண்டமாக விற்பனையாகும் ஆன்மீக பூஜைப் பொருட்கள் வரிசையில் முன்னணியில் இருப்பது கருங்காலி.திரைத்துறை பிரபலங்கள் முதல் உலகில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கருங்காலியைப் பற்றிய சில விசேஷமான தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விருட்சம் இருந்தாலும் அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த விருட்சங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி.செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. விருட்சங்களிலேயே மிகவும் அற்புதமானது. மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய அற்புத கொடை கருங்காலி. இயல்பிலேயே இறைத்தன்மை நிறைந்த இறைவனுக்கு மிக நெருக்கமான விருட்சம். அதனால் தான் பல சிறப்பு பெற்ற தலங்களில் கருங்காலி தல விருட்சமாக இருப்பதை காண முடிகிறது. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் மிகுதியாக இருக்கிறது. அளவற்ற மருத்துவ குணம், ஆரோக்கியத்தை தரக்கூடிய தன்மை எந்த விருட்சங்களுக்கு மிகுதியாக உள்ளதோ அதற்குள் அளவிட முடியாத தெய்வத் தன்மை நிரம்பி இருக்கும். அதிக அளவில் பிரபஞ்ச சக்தியையும் (மின் கதிர் வீச்சுகளையும்) நேர்மறை ஆற்றலையும் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்ட கருங்காலி மனித உடலில் ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எதிர் விளைவுகள் சிறிதும் இல்லாததால் இதன் நிழலில் நின்றால் கூட நோய் நீங்கும். ஆன்மா வலுவடையும். எனவே அனைத்து ராசியினரும், மதத்தினரும் பயன்படுத்தலாம்.

    விருட்ச வழிபாடு

    மரங்கள் மனிதர்களுக்கு மனதை மகிழ்விக்கும் மலர்களையும் உண்ணுவதற்கு காய், கனிகள் தருவதுடன் நிழல், குளிர்ச்சி, மழையும் தருகிறது. காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஆக மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.இதனால் தான் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். விருட்சங்களின் பயன்கள் அளவற்றவைகள். எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவைகள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நல்ல சக்திகளையும் ஈர்த்து தன்னுள் சேமித்து வைக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.

    இதனை வழிபடுபவர்களுக்கு தன்னுள் நிரம்பியுள்ள நற் சக்திகளால் விரும்பிய அனைத்து நற்பலன்களையும் தந்து எதிர்மறை சக்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது.அதனால் தான் நமது முன்னோர்கள் தெய்வீக சக்தி நிறைந்த மரங்களை வளர்த்து வழிபட்டு வந்தார்கள். விருட்சக சாஸ்தி ரத்தில் 27 நட்சத்தி ரத்தினர் வழிபட வேண்டிய விருட்சங்களையும் அதனால் ஏற்படும் நற்பலன்களையும்

    குறிபிட்டுள்ளது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் அவரவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கான விருட்சத்தை நட்டு விரும்பிய பலனை அடையலாம். பராமரிக்க முடியாத சூழ்நிலை இருப்பவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் விருட்சங்களை பராமரிக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும். கருங்காலி செவ்வாயின் விருட்சம் அதை அதிகமாக வளர்க்க பூமியில் நோய் தாக்கம் குறையும்.

    பொதுவாக கருங்காலி மரம்

    ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது. இதனை செங்கருங்காலி மற்றும் முள்ளுக்கருங்காலி என இரண்டாக வகைப்படுத்தலாம். கருங்காலியில் உலக்கை, மாலை, சிலைகள் செய்து ஆன்மீக வழிபாட்டிற்கு பயன்படுத்த அளவிட முடியாத நற்பலன்களை அடைய முடியும்.

    உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பெண் ஜாதகத்தில் கணவரையும் ஆண் ஜாதகத்தில் சகோதரத்தைப் பற்றியும் கூறும் கிரகமாகும்.செவ்வாயின் காரத்துவத்தால் ஏற்படக்கூடிய அனைத்து இன்னல்களுக்கு தீர்வு தரக்கூடிய நற்பண்புகளை கொண்ட விருட்சமே கருங்காலி.


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    மருத்துவ குணங்கள்

    இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. செவ்வாய் என்றால் ரத்தம்.

    இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும்.சர்க்கரையின் அளவு குறையும்.இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும்.குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.

    ஆண்களுக்கு உடல் பலமடையும்.

    ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

    பொதுவான பயன்கள்

    சித்தர்கள், முனிவர்கள் பயன்படுத்தும் தண்டம் ,குறி சொல்பவர்கள் பயன்படுத்தும் குச்சி, வீடுகளில் முன்னோர்கள் பயன்படுத்திய உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் அனைத்தும் கருங்காலியால் செய்யப்பட்டவைகளே. அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள் அது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிமிதமான சக்தியை வழங்கும்.

    அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் கிரகித்து வெளியேறுகின்றன. நன்கு விளைந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் தொல்லை, போட்டி, பொறாமை, எதிரிகளின் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டாகும் காரியத் தடை திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம், செய்வினை பிரச்சனை, நோய் மற்றும் மனநோய், தூக்கமின்மை மரண பயம், ஆயுள் குற்றம் நீங்கும்.காரிய சித்தியும் தொழில் வளர்ச்சியும் அடையும்.

    பணப் புழக்கம் அதிகரிக்கும்.

    குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

    கருங்காலி கோலை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது சொத்து பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.வாஸ்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறையும்.பூமிக்கு அடியில் உள்ள சல்லிய பொருட்களால் ஏற்படும் எதிர் வினைகளை சரி செய்கிறது.

    தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும்.

    வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.

    செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு ஏற்படும் நோய், விபத்து, கடன், சொத்து பிரச்சினை, திருமணத் தடை மண வாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசவுகரியங்களை குறைக்கிறது. இதில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக் கூடிய அனைத்து இன்னல்களும் தீரும், பாதிப்புகள் அகலும். அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்களாம். பின்பு மனதார வேண்டிக் கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள், மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    கருங்காலி மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், கவுலவம் கரணத்தில் பிறந்தவர்க ளுக்கும் செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவர்கள் கருங்காலி மரம் வளர்ப்பது ,கையில் உடலில் கருங்காலி மர பொருள்களை வைத்து இருப்பது சிறப்பான பலன் தரும்.

    கருங்காலி பொருட்களை பயன்படுத்தும் முறை

    கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலை, கோல் போன்ற எந்த பொருளாக இருந்தாலும் சுத்தமான பசும் பால் மற்றும் நீரில் கழுவி சந்தனம் , குங்குமமிட்டு தெரிந்த இஷ்ட மற்றும் குல தெய்வ மந்திரத்தை உருவேற்றி பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம், பூஜை முறைகள் தெரியவில்லை என்றால் முழுமனதோடு குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ ,நவகோள்களையோ வேண்டி பயன்படுத்தலாம். ஆன்ம பலம டைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியால் செய்யப்பட்ட பூஜை பொருட்களை வைத்து வணங்கி பயன் பெறுவோம்.

    Next Story
    ×