search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார்
    X

    பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார்

    • வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது.
    • மார்ச் 2-ந்தேதி கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ளது. இந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்றிருந்தார்.

    இந்திய அணி தனது முதல் போட்டியில் கடந்த 20-ந்தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவசரமாக மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பினார்.

    இதனால் இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது. இந்த நிலையில் இன்று மோர்னோ மோர்கல் இந்த அணியுடன் இணைந்துள்ளார்.

    ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது மோர்னே மோர்கலா் கவுதம் கம்பீர் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

    இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2-ந்தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×