search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கான்பூர் டெஸ்ட்: 3-வது சுழற்பந்து வீச்சாளராக அவரை களமிறக்க வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
    X

    கான்பூர் டெஸ்ட்: 3-வது சுழற்பந்து வீச்சாளராக அவரை களமிறக்க வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்

    • இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சு சாதகமாக இருக்கும்.

    வங்கதேச அணி இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஆகாஷ் தீப்பை விளையாட வைத்தது சரியான முடிவு தான். இவ்வேளையில் 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும்.

    ஏனெனில் பிளாட்டான மைதானத்தில் கூட பந்தை திருப்பி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடைய அவரை இந்த போட்டியில் விளையாட வைத்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் சாதகத்தை தரும். எனவே என்னை பொறுத்தவரை இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தக்கவைத்து மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும்.

    என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார்.

    Next Story
    ×