search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    6 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட்: இந்திய அணிக்கு திரும்பும் விராட் கோலி, ரிஷப் பண்ட்
    X

    6 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட்: இந்திய அணிக்கு திரும்பும் விராட் கோலி, ரிஷப் பண்ட்

    • இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
    • கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.

    ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.

    வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.

    Next Story
    ×