search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்தியா
    X

    மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்தியா

    • முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
    • ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.

    தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

    Next Story
    ×