search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: எந்த அணியில் விளையாடனும்? ரோகித் கேள்விக்கு ரசிகர் கொடுத்த பதில்
    X

    வீடியோ: எந்த அணியில் விளையாடனும்? ரோகித் கேள்விக்கு ரசிகர் கொடுத்த பதில்

    • ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
    • நான் எந்த அணியில் விளையாட வேண்டும் நீயே சொல் என ரோகித் கூறினார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மா ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே நான் எந்த அணிக்கு விளையாட வேண்டும் என்று நீ ஆசைபடுகிறாய் என கேட்டார். இதற்கு அந்த ரசிகர் ஆர்சிபி அணிக்கு வாங்க என கூறி, ஐ லவ் யூ என கூறினார். இதற்கு ரோகித் எந்த பதிலும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×