search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முல்தான் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி: பறிபோகும் கேப்டன் பதவி
    X

    முல்தான் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி: பறிபோகும் கேப்டன் பதவி

    • ஷான் மசூத் கேப்டனாக பொறுப்பேற்று ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
    • ஷான் மசூத் ஒரு கேப்டனாக தோல்வி அடைந்துவிட்டார். என தெரிவித்தார்.

    முல்தான்:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது.

    ஷான் மசூத் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் அணி ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில், ஷான் மசூத் ஒரு கேப்டனாக தோல்வி அடைந்துவிட்டார். ஷான் மசூத் ஒரு துவக்க வீரர். அவர் துவக்க வீரராகவே ஆட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

    ஆனால் அவர் மூன்றாம் வரிசையில் இறங்குகிறார். இப்போது என்ன செய்வது? யாரை அணியிலிருந்து நீக்குவது? அவர், அவரது இடத்தில் விளையாட வேண்டும். அவருக்கு எப்படி கேப்டன்சி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த கிரிக்கெட் அணிக்கு என்னதான் நடக்கிறது? இது மிகவும் அவமானமாக உள்ளது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    Next Story
    ×