என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO: பிலிப்சின் அட்டகாசமான கேட்ச்.. 300வது ஒருநாள் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த கோலி

- 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
- கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சால் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
GLENN PHILIPS - THE GREATEST IN TAKING STUNNERS ?#INDvsNZ #ChampionsTrophy #ViratKohli? pic.twitter.com/Cz2KLUN9Uc
— Tajamul (@Tajamul132) March 2, 2025
விராட் கோலியின் 300-வது போட்டியை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.
இப்போட்டியின் மூலம் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலி இணைகிறார்.
36 வயதான விராட் கோலி 300 போட்டியில் 288 இன்னிங்சில் 14,096 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 51 சதமும், 73 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் அவர் தனது 51-வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.