search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
    X

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

    • இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    ஹுலுன்புயர்:

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.

    Next Story
    ×