search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி
    X

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடந்தது.
    • இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆல் இங்கிலாந்து சாம்பியனான தென் கொரியாவின் பாக் ஹா நா-லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது.

    இதில், இந்திய ஜோடி 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடந்தது.

    தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் திரிஷா ஜாலி-காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    Next Story
    ×