search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    Lakshaya Sen
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிக்கு முன்னேறினார்.
    • முதல் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-8 என எளிதில் வென்றார். 2வது செட்டில் கெவின் கடும் போராட்டம் அளித்தார். இதனால் முதலில் பின்தங்கிய லக்ஷயா சென், அடுத்து அதிரடியாக ஆடி 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×